மூடு

தேவநாத சுவாமி கோவில்

வழிகாட்டுதல்

   தேவநாத சுவாமி கோவில் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள கடலூரின் புறநகர்ப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், இந்து விஷ்ணு கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தேவநாத சுவாமி கோவில் திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப்பட்டது. இந்த கோவில் 6 ஆம் நூற்றாண்டுகளில் இருந்து ஆழ்வாரின் புனிதர்களின் ஆரம்பகால இடைக்கால தத்துவமாக விளங்கிய திவ்ய பிரபந்தத்தில் புகழ்பெற்றது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான இந்த கோவில் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவான தேவானாதஸ்வாமி மற்றும் அவரது மனைவி லட்சுமி என்கிற அம்புஜவல்லியை மக்கள் வணங்கி வருகிறார்கள்.

தற்போதைய வடிவத்தில் உள்ள கோவில் இடைக்கால சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது, பின்னர் பாண்டியர்கள், ஹொய்சள சாம்ராஜ்ஜியம் மற்றும் விஜயநகர சாம்ராஜ்ஜியத்திலிருந்து விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த கோவிலில் 50 கல்வெட்டுகள் விக்ரம சோழர் (1118-1135), ராஜராஜ சோழர் III (1216-1256), ஜாடாவர்மன் சுந்தர பண்டியன் (1251-1268), விக்ரம பாண்டியன், வீரபாண்டியன் III, விஜயநகர ராஜா அச்சுத தேவா ராயா (1529-1542) மற்றும் கோபருஞ்சிங்கன் காலத்திலிருந்து உள்ளது. கல்வெட்டு துறை 50 கல்வெட்டுகளை இடைகால சோழர் ஆட்சியில் கண்டுபிடித்தது. அந்த கல்வெட்டுகளில் விக்ரம சோழர் (1118-1135), ராஜராஜ சோழர் III (1216-1256), ஜாடாவர்மன் சுந்தர பண்டியன் (1251-1268), விக்ரம பாண்டியன், வீரபாண்டியன் III, விஜயநகர ராஜா அச்சுத தேவா ராயா (1529-1542) மற்றும் கோபருஞ்சிங்கன் காலத்தில் இக்கோவிலுக்கு கொடை வழங்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. ராஜராஜ சோழர் III ஆட்சியின் போது இக்கோவில் முற்றுகையிடப்பட்டது. பல்லவ வம்சத்தின் கோபருஞ்சிங்கன்என்பவரால் ராஜராஜ சோழர் III சிறை வைக்கப்பட்டார். வீர நரசிம்மர் II (1220-1234) சோழா் ஆட்சியை காப்பாற்ற ஆட்சிக்கு வந்தார், இறுதியில் இலங்கை மன்னன் பராக்கிரமபாகுவைக் கொன்றார். கோபருஞ்சிங்கின் ஆட்சிக்காலத்தில் இந்த கோவிலின் கோபுரம் எழுப்பப்பட்டது, அதே சமயத்தில் கடவுள்வழிபாடுகள் மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் மற்ற கோவில்களை ஒத்திருந்தது. ராமனுஜாவின் வழித்தோன்றல்கள் விஜயநகர பேரரசின் காலத்தில் வழிபாட்டிற்கான விசேஷ ஏற்பாடுகள் வழங்கப்பட்டன. நவீன காலங்களில் இந்த கோயில் தமிழ்நாட்டின் இந்து சமய மற்றும் அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படுகிறது

புகைப்பட தொகுப்பு

  • தேவநாதசாமி கோவில் தொலைவு தோற்றம்
  • தேவநாதசாமி கோவில் அருகாமை தோற்றம்
  • பறவை பார்வையில் தேவநாதசாமி கோவில்

அடைவது எப்படி:

வான் வழியாக

ஆகாய மார்க்கம் : அருகிலுள்ள சர்வதேச விமான நிலையம் சென்னை (200 கி.மீ) ஆகும். கடலூரிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ள விமானநிலையம் பாண்டிச்சேரி, கடலூருக்கு அருகில் உள்ளது. கடலூர் நகரத்திலிருந்து 45 கி.மீ., தொலைவில் உள்ள நெய்வேலியில், இந்த மாவட்டத்திலேயே, புதிய விமான நிலையம் விரைவில் தொடங்கி செயல்பட உள்ளது

தொடர்வண்டி வழியாக

புகைவண்டி மார்க்கம் : 1. சென்னை – விழுப்புரம் – கடலூர் – தஞ்சாவூர் – திருச்சி புகைவண்டி மார்க்கம் கடலூர் நகரம் மாவட்ட தலைமையகம் வழியாக இயங்குகிறது. 2. இந்த மாவட்டத்தில் மற்றும்மொரு பெரிய ரயில் பாதை உள்ளது சென்னை – எழும்பூர் – விழுப்புரம் – விருத்தாசலம் – திருச்சி. விருத்தாசலம், கடலூர் நகரத்திலிருந்து 50 கி.மீ. கடலூர் மற்றும் விருத்தாசலம் இடையே இரயில் பாதை இணைக்கப்பட்டுள்ளது.

சாலை வழியாக

சாலைவழி : கடலூர் மாவட்டத்தில் சாலை போக்குவரத்து மிகவும் நன்றாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் NH45, NH45A கடலூர் வழியாக இயங்குகின்றன. மாநில நெடுஞ்சாலைகள் 32 & 36 கடலூர் மாவட்டம் வழியாக இயங்குகின்றன. மாநில தலைநகர் சென்னையிலிருந்து கடலூர் சாலை வழியில் 200 கி.மீ.